
டிரிக்கரிலிருந்து விடுபடும் ரவை
உரசிச்செல்லும் வண்ணத்துபூச்சிகளின்
சிறகுகளில் வழிகின்றன
பெருங்காட்டின் பச்சையம்
அடர் மழைக்கு கூடொடுங்கிய
ஆதி பறவையின் கண்களில்
பொதிந்திருக்கிறது நீலம்
முனை முறிந்த பேனா
வீழும் செந்நதியில்
நீராடி கரையேறுகிறான் ரிஷி
கிளையொன்றில் தொங்குது
வன தேவதையின் சடலம்...